search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி கோவில்"

    • பழைய ரூ‌.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளும் திருப்பதி உண்டியலில் செலுத்தப்பட்டன.
    • ரூ.500 கோடி வரை செலுத்தப்பட்ட பணத்தை மாற்ற ரிசர்வ் வங்கி ஒப்புக்கொள்ளவில்லை.

    திருப்பதி:

    திருப்பதியில் தினமும் பக்தர்கள் சராசரியாக ரூ.3.5 கோடி வரை உண்டியல் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதன் மூலமாக ஆண்டுக்கு ரூ. ஆயிரம் கோடிக்கும் அதிகமாக தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைத்து வருகிறது.

    இதனிடையே ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. எனினும், திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பக்தர்கள் தொடர்ச்சியாக செலுத்தி வந்தனர்.

    கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி வரை ரூ.3.20 கோடி 2 ஆயிரம் நோட்டுகள் உண்டியலில் செலுத்தப்பட்டன.

    அவற்றை மாற்ற அனுமதிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரியது. இதையடுத்து 5 தவணையாக பணத்தை மாற்ற ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது.

    அதன்படி ரூ.3.20 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திருப்பதி தேவஸ்தானம் மாற்றியுள்ளது.

    இதேபோல் பழைய ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளும் திருப்பதி உண்டியலில் செலுத்தப்பட்டன. ரூ.500 கோடி வரை செலுத்தப்பட்ட இந்த பணத்தை மாற்ற ரிசர்வ் வங்கி ஒப்புக்கொள்ளவில்லை.

    ஆதலால் அவை இன்னமும் தேவஸ்தான கிடங்கில் மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பதியில் நேற்று 57,909 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    32,403 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ரூ.3.81 கோடி வசூல் ஆனது. பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • வெயில் காரணமாக வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.
    • ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 105 முதல் 107 டிகிரி வரை சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர அச்சப்படுகின்றனர்.

    திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கடும் வெயில் காரணமாக அவதி அடைந்து வருகின்றனர். வெயில் காரணமாக வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.

    இன்று தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் 1½ மணி நேரத்தில் தரிசனம் முடிந்து வெளியே வந்தனர். எளிதில் தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பதியில் நேற்று 64,080 பேர் தரிசனம் செய்தனர். 25,773 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 4 ஆயிரம் கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர்.
    • திருப்பதியில் நேற்று ஒரே நாளில் 58 ஆயிரத்து 690 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    குறிப்பாக தங்கம் காணிக்கை செலுத்துவது அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை அதிகரித்தாலும் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் அதிக அளவில் தங்கத்தை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

    கடந்த ஆண்டில் 1,031 கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வங்கியில் டெபாசிட் செய்தனர். இதுவரை ரூ.8,496 கோடி மதிப்பிலான மொத்தம் 11 ஆயிரத்து 329 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

    உலக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதற்கு பிறகு தரிசனம் செய்து வரும் பக்தர்கள் அதிக அளவில் தங்கம் நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.

    கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 4 ஆயிரம் கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர். தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் பக்தர்கள் அளிக்கும் தங்க காணிக்கையும் உயர்ந்து வருகிறது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று ஒரே நாளில் 58 ஆயிரத்து 690 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 20 ஆயிரத்து 744 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.

    உண்டியல் காணிக்கையாக ரூ.3.02 கோடி வசூல் ஆனது. பக்தர்கள் சுமார் 6 மணி நேரம் வரை காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

    • அங்க பிரதடசணத்திற்கான டோக்கன்கள் 23-ந் தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவாணி டிரஸ்ட் டிக்கெட்டுகள் 11 மணிக்கும் வெளியிடப்படுகிறது.
    • ஸ்ரீவாரி சேவை ஒதுக்கீடு 27-ந் தேதி காலை 11 மணிக்கும், நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை 1 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும்.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது. இந்த சேவை டிக்கெட்டுகளை 20-ந் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம். அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு லக்கி டிப்பில் டிக்கெட் ஒதுக்கப்படும். இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் பணத்தை செலுத்தி டிக்கெட்டை பெறலாம்

    இதேபோல், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதிபாலங்கர சேவா டிக்கெட்டுகள் 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். உற்சவ சேவைகளுக்கான ஜூலை மாத ஒதுக்கீடு, அவற்றின் தரிசன ஸ்லாட்டுகள் 22-ந் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும்.

    அங்க பிரதடசணத்திற்கான டோக்கன்கள் 23-ந் தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவாணி டிரஸ்ட் டிக்கெட்டுகள் 11 மணிக்கும் வெளியிடப்படுகிறது.

    முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு 23-ந் மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். மாலை 3 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் அறை ஒதுக்கீடு வெளியிடப்படும்.

    ஸ்ரீவாரி சேவை ஒதுக்கீடு 27-ந் தேதி காலை 11 மணிக்கும், நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை 1 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும்.

    பக்தர்கள் இவற்றை கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

    • ரங்கநாயக மண்டபத்தில் சீதா, லட்சுமணர், அனுமன் சமேத ஸ்ரீ ராமருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது.
    • நாளை மாலை சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு நாளை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. காலையில் ரங்கநாயக மண்டபத்தில் சீதா, லட்சுமணர், அனுமன் சமேத ஸ்ரீ ராமருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு அனுமன் வாகனத்தில் கோதண்ட ராமர் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு, கோவில் வளாகத்தில் ஜீயர்கள் முன்னிலையில் ஸ்ரீ ராம நவமி ஆஸ்தானம் நடைபெறுகிறது.

    இதையொட்டி நாளை மாலை சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    புதன்கிழமை (18-ம் தேதி) இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடக்கிறது.

    கடந்த நிதி ஆண்டில் 1,031 கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வங்கியில் டெபாசிட் செய்தனர். இதுவரையில் மொத்தம் 11 ஆயிரத்து 329 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 4 ஆயிரம் கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர். தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் பக்தர்கள் அளிக்கும் தங்க காணிக்கையும் உயர்ந்து வருகிறது.

    திருப்பதியில் நேற்று ஒரே நாளில் 77 ஆயிரத்து 511 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 26 ஆயிரத்து 553 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ரூ.4.28 கோடி வசூல் ஆனது.பக்தர்கள் சுமார் 10 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர்.
    • பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாத சேவை நடந்தது.

    காலை 6 மணிக்கு ஏழுமலையான், விஸ்வகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தன. மூலவர் ஏழுமலையான் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புதிய பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டது.

    இதையடுத்து காலை 7 மணி முதல் 9 மணி வரை ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் 4 மாட வீதிகள் மற்றும் கொடி மரத்தை சுற்றி உலா நடந்தது.

    ஏழுமலையானை தரிசிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 4 மாட வீதிகளில் குவிந்தனர். கோவிந்தா கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு தங்க மண்டபத்தில் யுகாதி ஆஸ்தானம் அறிவியல் பூர்வமாக நடந்தன.

    தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.

    திருப்பதியில் நேற்று 61,920 பேர் தரிசனம் செய்தனர். 17,638 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.55 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
    • நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்து வருவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை முதல் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று காலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. ஆந்திராவில் தற்போது கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    கோடைகால விடுமுறையில் மேலும் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய உள்ளதாக தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

    திருப்பதியில் நேற்று 75,414 பேர் தரிசனம் செய்தனர். 30,073 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.68 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • கோவில் நிர்வாகம் பக்தர்கள் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
    • லட்டு கவுன்டர்களில் விற்பனை செய்யப்படும் சணல் பையை வாங்கி காலில் கட்டிக்கொண்டு நடந்து செல்கின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரிக்கிறது.

    கோடைக்காலம் தொடங்குவதற்கு முன் ஏழுமலையான் கோவில் சுற்றுவட்டார பகுதிகள், கோவிலில் இருந்து லட்டு வாங்க செல்லும் வழியில், நான்கு மாட வீதிகள் ஆகியவற்றில் கூல்-பாயின்ட் என்ற பெயரில் வெள்ளை பெயின்ட் அடித்து வைப்பது வழக்கம்.

    ஆனால் இந்தமுறை சில வழிகளைவிட்டு விட்டு திருப்பதி மலையில் கூல் பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது. பகல் 11 மணிக்கு மேல் கோவிலில் இருந்து வெளியில் வரும் பக்தர்கள், லட்டு பிரசாதம் வாங்கச் செல்லும் பக்தர்கள் ஆகியோர் அதிக உஷ்ணம் காரணமாக நடந்து செல்ல முடியாமல் அவதி அடைகின்றனர்.

    அவர்கள் லட்டு கவுன்டர்களில் விற்பனை செய்யப்படும் சணல் பையை வாங்கி காலில் கட்டிக்கொண்டு நடந்து செல்கின்றனர்.

    கோவில் நிர்வாகம் பக்தர்கள் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • கோவில் கருவறை மற்றும் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்தில் ரூ.118 கோடி உண்டியல் வருவாய் கிடைத்தது. இதன் மூலம் கடந்த 25 மாதங்களாக தொடர்ந்து ரூ.100 கோடியை தாண்டி உண்டியல் வசூலாகி உள்ளது.

    வருகிற 9-ந் தேதி யுகாதி ஆஸ்தானத்தையொட்டி தெலுங்கு வருட பிறப்பு கொண்டாடப்பட உள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவில் நாளை காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் கருவறை மற்றும் வளாகம் முழுவதும் தூய்மை ப்படுத்தும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

    இதனால் நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக கொண்டுவரும் பரிந்துரை கடிதங்களை தேவஸ்தானம் ரத்து செய்தது.

    இதனால் ரேணிகுண்டா விமான நிலையம் மற்றும் திருப்பதி தேவஸ்தானத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்ரீ வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் அதிக அளவில் விற்பனையாகின்றன.

    அதன்படி கடந்த 15 நாட்களில் ரூ.22.75 கோடிக்கு ஸ்ரீவாணி டிக்கெட்டு விற்பனையாகி உள்ளது.

    திருப்பதியில் நேற்று 81, 224 பேர் தரிசனம் செய்தனர். 24,093 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.35 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • இலங்கையில் ஏழுமலையான் கோவில் கட்ட பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
    • சில நிர்வாக காரணங்களுக்காக தர்மா ரெட்டி இலங்கை செல்வது ஒத்திவைக்கப்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோவில் கட்டப்படுகிறது.

    இலங்கையில் ஏழுமலையான் கோவில் கட்ட வேண்டும் என அந்த நாட்டின் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் இலங்கையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒரு அறக்கட்டளை இலங்கையின் தலைநகர் கொழும்புவில் பிரமாண்டமான ஏழுமலையான் கோவில் கட்ட உதவி செய்யுமாறு அந்நாட்டு அரசு மூலம் இந்திய அரசை அனுகியது.

    இதுகுறித்து இந்திய அரசு சார்பில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து இலங்கையில் ஏழுமலையான் கோவில் கட்ட பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கடந்த 2-ந் தேதி இலங்கை சென்று கோவில் கட்டுவதற்கான இடங்கள் மற்றும் எவ்வளவு மதிப்பீட்டில் கோவில் கட்டுவது குறித்து ஆய்வு செய்ய இருந்தார்.

    சில நிர்வாக காரணங்களுக்காக தர்மா ரெட்டி இலங்கை செல்வது ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மீண்டும் 29-ந்தேதி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டி இலங்கை செல்கிறார். அவர் கோவில் அமைய உள்ள இடத்தில் ஆய்வு செய்கிறார்.

    • கோவிலின் கதவுகளுக்கு தங்கத்தகடு பதிப்பதற்காக அறங்காவலர் குழு தலைவர், முதன்மை செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • திருப்பதியில் நேற்று 67,832 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவருக்கு முன்பாக உள்ள ஜெய விஜயா கதவுகளுக்கு தங்கத் தகடுகள் பதிக்கப்படும் என அறிவித்து இருந்தனர். தங்க தகடுகள் பதிக்கும் பணி தள்ளி போய்க்கொண்டே உள்ளது.

    இந்த நிலையில் கோவிலின் கதவுகளுக்கு தங்கத்தகடு பதிப்பதற்காக அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகரன் ரெட்டி, முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது கதவுகளுக்கு தங்கத்தகடு பதிப்பதற்கு எவ்வளவு தங்கம் தேவைப்படுகிறது. இதற்கான தங்கத்தை தேவஸ்தானத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தில் பதிப்பதா அல்லது பக்தர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் நன்கொடை பெறுவதா? என ஆலோசனை நடத்தினர்.

    திருப்பதியில் நேற்று 67,832 பேர் தரிசனம் செய்தனர். 25,636 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.55 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • பல்வேறு காரணங்களால் கவுண்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.
    • ஒரு பக்தர் ரூ.10 ஆயிரத்து 500 கட்டணத்தில், ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதி விமான நிலையம் வந்து ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள், தாங்கள் விமானத்தில் வந்ததற்கான ஆவணங்களை சமர்ப்பித்து, தேவஸ்தானத்தின் ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு ரூ. 10 ஆயிரம் நன்கொடை மற்றும் ரூ. 500 கட்டணம் செலுத்தி, 'விஐபி பிரேக்' தரிசன டிக்கெட் பெற்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    இதன் மூலம், ஒரு பக்தர் ரூ.10 ஆயிரத்து 500 கட்டணத்தில், ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த கவுண்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.

    இந்நிலையில், பக்தர்கள் வசதிக்காக திருப்பதி விமான நிலையத்தில் மீண்டும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் கவுண்டர், இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.

    ×